Tamilnadu
“அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் செய்யாத துறைகளே இல்லை; அனைத்திலும் ஊழல் மயம் தான்”: பொன்முடி MLA!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என்று மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக துணை பொதுச் செயலாளரும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்துகொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பேசிய அவர், அ.தி.மு.க ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் ஊழல்கள் நடைபெறாத துறைகளே இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரே மாதத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது அ.தி.மு.க அரசின் ஊழலுக்கு எடுத்துக்காட்டாகும்.
இந்த ஆட்சி முழுவதும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல, கமிஷன், கலெக்சன், கரப்ஷனில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதம் கழித்து திமுக ஆட்சிக்கு வரும்போது கிராமங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என பேசினார்.
Also Read
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
"மோடியின் அமைச்சரவையில் 39 % பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்" : அமித்ஷாவுக்கு ஆ.ராசா MP பதிலடி !
-
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்காக... இழப்பீடு தொகையை அதிகரித்த தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !
-
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!
-
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!