Tamilnadu
“அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் செய்யாத துறைகளே இல்லை; அனைத்திலும் ஊழல் மயம் தான்”: பொன்முடி MLA!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என்று மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக துணை பொதுச் செயலாளரும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்துகொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பேசிய அவர், அ.தி.மு.க ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் ஊழல்கள் நடைபெறாத துறைகளே இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரே மாதத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது அ.தி.மு.க அரசின் ஊழலுக்கு எடுத்துக்காட்டாகும்.
இந்த ஆட்சி முழுவதும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல, கமிஷன், கலெக்சன், கரப்ஷனில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதம் கழித்து திமுக ஆட்சிக்கு வரும்போது கிராமங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என பேசினார்.
Also Read
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
-
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!
-
வெறுப்பு பேச்சு - பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய Instagram!
-
”சமூகநீதியை பறிக்கும் மோடியின் தனியார்மயம்” : ராகுல் காந்தி MP விமர்சனம்!
-
UPSC தேர்வில் பீடித்தொழிலாளி மகள் வெற்றி : இளைஞர்களுக்கு ஒளிவிளக்காக இருக்கும் நான் முதல்வன் திட்டம்!