Tamilnadu
“எங்களுக்கு உயர்மின் கோபுரம் வேண்டாம்” - ரத்தத்தில் கையெழுத்திட்டு திருப்பூர் விவசாயிகள் போராட்டம்!
உயர்மின்கோபுரம் திட்டத்தை கைவிடக்கோரி காங்கேயத்தில் விவசாயிகள் 4வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று உயர்மின் கோபுரம் வேண்டாம் என விவசாயிகள் ரத்தத்தில் கையொப்பமிட்டு போராட்டம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரங்கள் திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை திருப்பூர் மாவட்டம் - படியூர், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம், மதுரை மாவட்டம் - வாலந்தூர் ( உசிலம்பட்டி) ஆகிய இடங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
அதன்படி திருப்பூர் மாவட்டம் - படியூர் பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் 4 வது நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர் மின் கோபுரம் எங்களுக்கு வேண்டாம் எனவும் உயர்மின் கோபுர திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தங்களது ரத்தத்தில் கையொப்பமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!