Tamilnadu
“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்த விமானத்தில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுததால், அக்குழந்தையும், தாயும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் நேற்று பகல் 12 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' விமானத்தில், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அந்த விமானத்தில், ராகுல் என்பவர், அவரது மனைவி லட்சுமிதேவி (30), மற்றும் அவர்களது நான்கு மாத கைக் குழந்தையுடன் பயணித்துள்ளார்.
விமானத்தில் ஏறியதில் இருந்து, நான்கு மாத கைக்குழந்தை இடைவிடாமல் அழுது கொண்டிருந்துள்ளது. எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால், முதல்வர் உள்ளிட்ட மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படும் எனக் கருதி தாயும், குழந்தையும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணித்த விமானத்தில், குழந்தை விடாமல் அழுததற்காக, தாயும் குழந்தையும் இறக்கிவிடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு குழந்தையின் அழுகுரலைக் கூடச் சகித்துக்கொள்ள முடியாத முதல்வர் பழனிசாமி, குழந்தைகளுடன் புகைப்படம் மட்டும் எடுத்து பல கோடிகளில் விளம்பரம் செய்வது ஏன் என பொதுமக்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!