Tamilnadu
சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)
தவப்புதல்வன் ஐயன் திருவள்ளுவரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக திமுக ஆட்சியில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து சிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
குமரிக்கடல் முனையில் 133 அடி உயரத்தில் வானுயர தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சிலை அமைத்து பெருமை சேர்த்தார் தலைவர் கலைஞர். திக்கெட்டும் திருக்குறளின் புகழ் பரவும் விதமாக கர்நாடக மாநில எல்லையிலும் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி திமுக செய்தித்தொடர் இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பகுதிச்செயலாளர் அகஸ்டின் பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நுங்கை வி.எஸ்.ராஜ்,. வட்டச்செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!