Tamilnadu
சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)
தவப்புதல்வன் ஐயன் திருவள்ளுவரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக திமுக ஆட்சியில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து சிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
குமரிக்கடல் முனையில் 133 அடி உயரத்தில் வானுயர தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சிலை அமைத்து பெருமை சேர்த்தார் தலைவர் கலைஞர். திக்கெட்டும் திருக்குறளின் புகழ் பரவும் விதமாக கர்நாடக மாநில எல்லையிலும் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி திமுக செய்தித்தொடர் இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பகுதிச்செயலாளர் அகஸ்டின் பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நுங்கை வி.எஸ்.ராஜ்,. வட்டச்செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !