Tamilnadu
சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)
தவப்புதல்வன் ஐயன் திருவள்ளுவரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக திமுக ஆட்சியில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து சிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
குமரிக்கடல் முனையில் 133 அடி உயரத்தில் வானுயர தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சிலை அமைத்து பெருமை சேர்த்தார் தலைவர் கலைஞர். திக்கெட்டும் திருக்குறளின் புகழ் பரவும் விதமாக கர்நாடக மாநில எல்லையிலும் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி திமுக செய்தித்தொடர் இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பகுதிச்செயலாளர் அகஸ்டின் பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நுங்கை வி.எஸ்.ராஜ்,. வட்டச்செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.
Also Read
-
“திசை காட்டி விட்டது திருச்சி! எதிரிகள் எழ முடியாத அளவுக்கு வெல்வோம்!” : முரசொலி தலையங்கம்!
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !