Tamilnadu
தந்தை பெரியாரின் புத்தகங்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது!
கோவையில் போகி பண்டிகையின்போது, தந்தை பெரியாரின் நூல்களைக் கொளுத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மக்கள் தலைவர்களை அவமதிக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அசோக் நகர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பிரசன்னா தலைமையில் கூடிய சிலர், தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’, ‘கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்' உள்ளிட்ட சில புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்த முயன்றனர்.
அப்போது அங்கு வந்த கோவை போலிஸார் நூல்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தி பிரசன்னா என்பவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பிரசன்னா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கணபதி ரவி, கார்த்திகேயன், தேவராஜ் ஆகியோர் மீது கோவை மாநகர போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் விழா கொண்டாடப்படுவதையொட்டி, இந்து மக்கள் கட்சியினர் தந்தை பெரியார் நூல்களை எரித்து வன்முறையைத் தூண்ட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!