Tamilnadu
“உயிர்களைக் குடித்தும் அடங்காத விளம்பர வெறி” - சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க நிர்வாகி!
அ.தி.மு.கவினரின் விளம்பர வெறி இதுவரை பல உயிர்களைக் காவு வாங்கியும், சாலையோரங்களில் அனுமதியின்றி பேனர்களை அமைக்கும் போக்கு அக்கட்சியினரிடையே தொடர்கிறது.
சென்னை பெருங்குடி எம்.ஜி.ஆர் சாலை கே.பி.கே நகரின் வாயிலில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் விளம்பர பேனர் வைத்துள்ளனர்.
எவ்வித முன் அனுமதியும் பெறாமல் பேனர் வைத்தது மட்டுமல்லாமல், நினைவு தினம் முடிந்து 3 நாட்களாகியும் பேனரை அகற்றாமல் வைத்துள்ளனர். எப்போது வேண்டுமானலும் சாலையில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மூன்று நாட்களாக பேனர் அகற்றப்படாமல் இருந்தும் இது தொடர்பாக துரைபாக்காம் போலிஸாரும், அரசு நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சமீபத்தில் அ.தி.மு.க சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கே.பி.கந்தன் தரப்பினர் அமைத்துள்ள பேனர் என்பதால் அதிகாரிகளும் போலிஸாரும் மெளனம் காக்கின்றனா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் என சொல்லிக்கொண்டு அதிகாரிகளை மதிக்காமல் சட்டத்தை மீறி கே.பி.கந்தன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதிகாரிகளும், பொதுமக்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
Also Read
-
மாநில அரசுகள் பின்பற்றும் அரும்பெரும் சாதனைகளை செய்த திராவிட மாடல் அரசு - வைகோ பாராட்டு !
-
உலகக்கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வு எல்லாம் அழிக்கமுடியாது - மும்பை பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து !
-
“அடிவயிறெரிய அறிக்கை விடலாமா?" : பழனிசாமிக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
-
ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் இதுதான் - கங்குலி கருத்து !
-
”ஏன் பதறுகிறார் மோடி?” : ஊடகவியலாளர் அனுஷா ரவி சூட் கேள்வி!