Tamilnadu
“உயிர்களைக் குடித்தும் அடங்காத விளம்பர வெறி” - சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க நிர்வாகி!
அ.தி.மு.கவினரின் விளம்பர வெறி இதுவரை பல உயிர்களைக் காவு வாங்கியும், சாலையோரங்களில் அனுமதியின்றி பேனர்களை அமைக்கும் போக்கு அக்கட்சியினரிடையே தொடர்கிறது.
சென்னை பெருங்குடி எம்.ஜி.ஆர் சாலை கே.பி.கே நகரின் வாயிலில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் விளம்பர பேனர் வைத்துள்ளனர்.
எவ்வித முன் அனுமதியும் பெறாமல் பேனர் வைத்தது மட்டுமல்லாமல், நினைவு தினம் முடிந்து 3 நாட்களாகியும் பேனரை அகற்றாமல் வைத்துள்ளனர். எப்போது வேண்டுமானலும் சாலையில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மூன்று நாட்களாக பேனர் அகற்றப்படாமல் இருந்தும் இது தொடர்பாக துரைபாக்காம் போலிஸாரும், அரசு நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சமீபத்தில் அ.தி.மு.க சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கே.பி.கந்தன் தரப்பினர் அமைத்துள்ள பேனர் என்பதால் அதிகாரிகளும் போலிஸாரும் மெளனம் காக்கின்றனா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் என சொல்லிக்கொண்டு அதிகாரிகளை மதிக்காமல் சட்டத்தை மீறி கே.பி.கந்தன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதிகாரிகளும், பொதுமக்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!