Tamilnadu
“பள்ளிக்கால நண்பன் கொரோனாவால் பலியான துக்கம் தாளாமல் இளைஞர் தற்கொலை” : பெருங்களத்தூர் அருகே சோகம்!
சென்னை தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் தேவநேசன் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (28). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது பள்ளிக்கால நண்பர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற நண்பரின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பியவர், கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் தனி அறையில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பீர்க்கன்கரணை போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பீர்க்கன்கரணை போலிஸார் வழக்குப்பதிவு செய்து சங்கர், தனது நண்பர் கொரோனாவால் இறந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”