Tamilnadu
குடும்பத்தினருக்காக முதல்வர் பதவியை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யும் எடப்பாடி - சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!
திருவாரூர் மாவட்டம் செல்லூரைச் சேர்ந்த கண்ணன் வேலு என்பவர் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில், விவசாயத்திற்காக ஆற்றிலிருந்து மேடான பகுதிகளுக்கு தண்ணீரை எடுப்பதற்காக தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டதாகவும், முதல்வரும், அவரது குடும்பத்தினரும் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்துக்கு மட்டும், 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை, 15 குதிரை திறனாக மாற்ற அனுமதி அளித்து, நீர்வள ஆதாரத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் கடந்த மார்ச் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த உத்தரவு முதல்வர் பதவிக்கான நடத்தை விதிகளை மீறிய செயல் என்றும், அதிகார துஷ்பிரயோகம் என்றும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, குதிரைத்திறனை அதிகரிக்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் 48 விவசாயிகள் அளித்த விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், முதல்வரின் குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சங்கத்திற்கு மட்டும் நான்கு நாட்களில் அனுமதி அளித்தது அதிகார துஷ்பிரயோகம் என வாதிட்டார்.
இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி, பொதுப்பணித்துறை செயலர் மற்றும் நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!