Tamilnadu
குடும்பத்தினருக்காக முதல்வர் பதவியை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யும் எடப்பாடி - சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!
திருவாரூர் மாவட்டம் செல்லூரைச் சேர்ந்த கண்ணன் வேலு என்பவர் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில், விவசாயத்திற்காக ஆற்றிலிருந்து மேடான பகுதிகளுக்கு தண்ணீரை எடுப்பதற்காக தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டதாகவும், முதல்வரும், அவரது குடும்பத்தினரும் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்துக்கு மட்டும், 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை, 15 குதிரை திறனாக மாற்ற அனுமதி அளித்து, நீர்வள ஆதாரத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் கடந்த மார்ச் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த உத்தரவு முதல்வர் பதவிக்கான நடத்தை விதிகளை மீறிய செயல் என்றும், அதிகார துஷ்பிரயோகம் என்றும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, குதிரைத்திறனை அதிகரிக்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் 48 விவசாயிகள் அளித்த விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், முதல்வரின் குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சங்கத்திற்கு மட்டும் நான்கு நாட்களில் அனுமதி அளித்தது அதிகார துஷ்பிரயோகம் என வாதிட்டார்.
இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி, பொதுப்பணித்துறை செயலர் மற்றும் நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!