Tamilnadu

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மு.க.ஸ்டாலின்! #MKStalin4TN

கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், சாலை வழியாகக் கடலூர் மாவட்டத்திற்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், புரெவி புயலால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

வெள்ள பாதிப்பு பகுதிகளை, வெள்ள நீரில் இறங்கிப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.