Tamilnadu
“சுடுகாட்டுக்குப் பாதையில்லை” : ஆரணி அருகே இறந்தவரின் உடலை மார்பளவு தண்ணீரில் எடுத்துச்சென்ற அவலம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கமண்டலபுரம் கிராமத்தில், சேட்டு (80) என்பவர் நேற்று உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக இன்று சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் பொழுது ஆற்றில் மார்பு அளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை கொண்டு சென்றனர்.
மேலும் கடந்த வாரம் கரையை கடந்த நிவர் புயல் காரணமாக ஜவ்வாது மலை காட்டாறு பகுதியில் அதிக அளவு மழை பெய்து செண்பகத்தோப்பு அணையில் சுமார் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
செண்பகத்தோப்பு அணை திறந்ததால் கமண்டல நீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது இதனால் கமண்டலபுரம் கிராமத்தில் இன்று சேட்டு என்பவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் ஆற்றில் மார்பு அளவு நீரில் இறங்கி மிதங்கிய படி சடலத்தை கொண்டு சென்றனர்.
ஆகையால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கமண்டல நதியில் கடந்து படவேடு செல்ல தரைப்பாலம் அல்லது மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் இதுவரை யாரும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும் கமண்டலபுரத்தில் இது போன்று ஆற்றில் வெள்ளம் வரும் பொழுது யாராவது உயிரிழந்தால் ஆற்றில் இறங்கி உயிரை பணையம் வைத்து, அவர்களது சடலத்தை கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது என்று அந்த கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!