Tamilnadu
"2021ல் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் தமிழகம் முழுக்க தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இன்று விவசாயிகளை சந்தித்துச் உரையாடிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்களிடையே பேசுகையில் தெரிவித்ததாவது :
தி.மு.க-வின் பிரச்சாரத்திற்கு இலவச விளம்பரம் செய்து கொடுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. 2021-ல் தி.மு.க தான் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
அ.தி.மு.க ஊழல் ஆட்சியில் 10 ஆண்டுகளாக செய்த துரோகங்களை எடுத்துக் கூறவே இந்த பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இதே சமயத்தில் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். அடிமை அ.தி.மு.க ஆதரவு கொடுத்த சட்டத்திற்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயம் கார்ப்பரேட்களின் கைகளுக்குப் போய்விடும். உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஜெயலலிதா அரசு கூட ஒப்புதல் தரவில்லை; ஆனால் இப்போதைய அ.தி.மு.க அரசு பா.ஜ.கவிற்கு ஆதரவளித்துள்ளது.
நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்யும் ஊழல் அனைவருக்கும் தெரிந்துள்ளது. காமராஜ் எப்படி அமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அமைச்சர் காமராஜ் ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை. சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை. வாக்களித்த மக்களுக்கும் உண்மையாக இல்லை.” எனப் பேசினார்.
Also Read
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
-
பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!