Tamilnadu
“நிவர் புயலால் வேரோடு சாய்ந்த 60 ஆண்டுகள் பழமையான மரம்” : மீண்டும் நட்டு வைத்த பள்ளி முன்னாள் மாணவர்கள்!
புயலாக அச்சுறுத்திய நிவர் புயல் கடந்த 25ம் தேதி, புதுச்சேரி மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இப்புயலால் புதுச்சேரி நகரப் பகுதியில் பலங்கால மரங்கள் பல வேரோடு சாய்ந்தன.
அதில், குறிப்பாக 60 ஆண்டுக்கு மேல் வளர்ந்த ஆலமரம் ஒன்றும் புயலால் வோரோடு சாய்ந்துள்ளது.இந்த ஆலமரமானது, புதுச்சேரி அரியாங்குப்பம் மனவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளது.
இந்த நிலையில், 60 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்ததை பற்றிக் கேள்விபட்ட அப்பள்ளியில் படித்த முன்னாள் மானவர்களுக்கு வாட்ஸ்அப் குழு மூலம் ஒருவருக்கு ஒருவர் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்து பார்த்து அவர்கள் சோகமடைந்தனர்.
பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து அதன் கிளைகளை சரி செய்து அதே இடத்தில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், வனத்துறை ஆலோசனைபடி நிமிர்த்தி நட்டனர். இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். இப்பள்ளியில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி பயின்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
-
“ஆளத் தெரியாமல், இந்தியாவை அடகு வைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்போம்!” : கி.வீரமணி அறிக்கை!
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!