Tamilnadu
உ.பி-யில் ‘லவ் ஜிஹாத்’ சட்டத்தைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கு ராமன் பெயர் வைக்க யோகி அமைச்சரவை முடிவு!
பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் அம்மாநில அரசு, தொடர்ந்து சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
சமீபத்தில் கூட சிறுபான்மையின மக்கள் மீது வெறுப்புனர்வை ஏற்படுத்தும் வகையில், அவர்களின் சமூக மக்களுக்கு எதிரான அவச சட்டம் ஒன்றை அம்மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.
அதாவது, லவ் ஜிஹாத்தை குற்றமாக்கி புதிய அவசர சட்டத்தை அம்மாநில அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, விருப்பத்துடன் மதம் மாறுவதாக இருந்தால் 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளது.
இந்நிலையில் அனைத்து சமூக மக்களும் பயன்படுத்தும் போக்குவரத்துதுறையின் பெயரை ஒரு மதம் சார்ந்து மாற்றும் முயற்சியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் பெயரை “மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம்” என பெயர் மாற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' அயோத்தியில் உள்ள விமான நிலையத்தின் பெயரை மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் என மாற்றும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.
இதற்காக உத்தர பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். யோகி அரசின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!