Tamilnadu
“ஆரணியில் சிலிண்டர் வெடித்து தரைமட்டமான குடியிருப்பு - 3 பேர் பலி” : கவனக்குறைவால் நடந்த பரிதாப சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் சாலையில் உள்ள மூதாட்டி முக்தா, வளர்ப்பு மகள் மீனா(18) இவரது வீட்டில் வாடகை குடியிருப்பில் இருப்பவர் ஜானகிராமன் மனைவி காமாட்சி சுரேஷ், ஹேமநாத் என்ற 2 மகன்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு மூதாட்டி முக்தா, சிலிண்டர் அணைக்காமல் சென்றதாகவும், காலையில் டீ போடுவதற்கு வந்து சிலிண்டரை ஆன் செய்துள்ளார். அப்போது ஏற்கனவே சிலிண்டர் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அதிக வேக சத்ததுடன் வெடித்தது. இதில் வீடு தரைமட்டமானது.
இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த வந்த ஆரணி தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இதில் இடிபாடுகளில் சிக்கிய ஹோமநாத் (13) காமாட்சி (37) சந்திரம்மாள் உள்ளிட்ட 7 பேரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காமாட்சி, சந்திரம்மாள், ஹேமநாத் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தனர். அதனையொடுத்து இது சம்மந்தமாக ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!