Tamilnadu
“திராவிட இயக்கம் பெண்ணுரிமைக்காக போராடியதில் உலகளவில் கிடைத்த வெற்றி இது”: பூண்டி கலைவாணன் MLA பெருமிதம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றியை திருவாரூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுமே மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பூர்விக கிராமமான துளசேந்திரபுரம் கிராமத்திற்கு சென்று பட்டாசு வெடித்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
மேலும் கமலா ஹாரிஸ் நன்கொடை வழங்கிய அவரது குலதெய்வ கோவிலில் கமலா ஹரிஸ் பெயர் பொறித்த கல்வெட்டை பார்வையிட்டு, கோவில் நிர்வாக அறங்காவலர் ரமணி என்பவரிடம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான பூண்டி கலைவாணன், “திராவிட இயக்கம் பெண்ணுரிமைக்காக போராடியதில் உலக அளவில் கிடைத்த வெற்றியாக இதனை கருதுகிறோம்.
இந்த காவிரி படுகை படுகை மாவட்டங்கள் நாகரிகம், கலாசாரம், அரசியல் உட்பட அத்தனைக்கும் ஆணிவேரான அடித்தளமான மண்.இதனை மீண்டும் மீண்டும் ஒவ்வொருவராக நிரூபித்து இந்த மண்ணிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹரிஸ்க்கு திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துளார்.
Also Read
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!