Tamilnadu
நவ. 16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கலாம் : நவ.10 முதல் திரையரங்குகளுக்கு அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. கொரோனா பரவல் தொடரும் நிலையில், வாழ்வாதாரம் கருதி அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 30 வரையான ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் வருமாறு :
* பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும், பணியாளர் விடுதிகளும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
* பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் நவம்பர் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
* 50% இருக்கைகளுடன் திரையரங்குகள், வணிக வளாகங்கள் - மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உள்ள திரையரங்குகளை வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
* கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு நவம்பர் 2-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
* காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் நவம்பர் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.
* வழிகாட்டு நெறிமுறைகளுடன் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயங்க அரசு அனுமதி.
* சமூக - அரசியல் கூட்டங்கள், கலாச்சார - மதம் சார்ந்த கூட்டங்களில் வரும் நவம்பர் 16 முதல் 100 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி!
* சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் 150 பேர் வரை பங்கேற்க அனுமதி.
* நீச்சல் குளங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் அறிவிப்பு வரும் வரை திறக்கப்படாது.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!