Tamilnadu
நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. அடுத்த 2 நாட்களின் தமிழக வானிலை நிலவரம்!
தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விரகனுர் அணை (மதுரை), மதுரை _ISRO (மதுரை) தலா 10செ.மீ, மதுரை விமானநிலையம் (மதுரை) 8 செ.மீ, திருமங்கலம் (மதுரை), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), வத்திராயிருப்பு (விருதுநகர்), மதுரை தெற்கு (மதுரை) தலா 7 செ.மீ, விளாத்திகுளம் (தூத்துக்குடி), கோவில்பட்டி (தூத்துக்குடி) தலா 5 செ.மீ, கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), சாத்தூர் (விருதுநகர்) தலா 4 செ.மீ, பிளவக்கல் (விருதுநகர்), சோழவந்தான் (மதுரை), எட்டயபுரம் (தூத்துக்குடி), சித்தாம்பட்டி (மதுரை ) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!