Tamilnadu
கரூரில் குப்பைக்கூளத்தினிடையே கிடக்கும் அம்பேத்கர் சிலை : கொந்தளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்!
கரூர் மாவட்டத்தில் எந்த இடத்திலும் சட்டமேதை அம்பேத்கருக்கு சிலை இல்லை. இதனால், சிலை வைக்க அனுமதி கேட்டு பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கரூர் அரசு கல்லூரி முன்பு இரவோடு இரவாக எந்தவித முன்னறிவிப்புமின்றி அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.
இதையடுத்து அனுமதியின்றி சிலை வைத்ததாக, மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி அம்பேத்கர் சிலையை அகற்றியது. அகற்றப்பட்ட சிலை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சிலை கரூர் வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தில் மாடிப்படிகளுக்கு கீழ் குப்பை கூளங்களுக்கிடையே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த பெரியார் திராவிடர் கழகத்தினர் அதிர்ந்து போயுள்ளனர்.
இதுகுறித்து சிலை வைத்த தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தனபால் கூறுகையில், அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதாக கூறி சிலையை அகற்றிய மாவட்ட நிர்வாகம், அந்தச் சிலையை குப்பையில் போட்டு வைத்துள்ளது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பைகளுக்கிடையே சட்ட மேதையின் சிலை கிடப்பதை எந்த ஊழியரும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. சட்டமேதைக்கு அரசு ஊழியர்கள் அளிக்கும் அவமரியாதையை யார் தட்டிக் கேட்பது” எனக் கொந்தளித்துள்ளார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!