Tamilnadu
கரூரில் குப்பைக்கூளத்தினிடையே கிடக்கும் அம்பேத்கர் சிலை : கொந்தளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்!
கரூர் மாவட்டத்தில் எந்த இடத்திலும் சட்டமேதை அம்பேத்கருக்கு சிலை இல்லை. இதனால், சிலை வைக்க அனுமதி கேட்டு பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கரூர் அரசு கல்லூரி முன்பு இரவோடு இரவாக எந்தவித முன்னறிவிப்புமின்றி அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.
இதையடுத்து அனுமதியின்றி சிலை வைத்ததாக, மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி அம்பேத்கர் சிலையை அகற்றியது. அகற்றப்பட்ட சிலை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சிலை கரூர் வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தில் மாடிப்படிகளுக்கு கீழ் குப்பை கூளங்களுக்கிடையே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த பெரியார் திராவிடர் கழகத்தினர் அதிர்ந்து போயுள்ளனர்.
இதுகுறித்து சிலை வைத்த தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தனபால் கூறுகையில், அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதாக கூறி சிலையை அகற்றிய மாவட்ட நிர்வாகம், அந்தச் சிலையை குப்பையில் போட்டு வைத்துள்ளது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பைகளுக்கிடையே சட்ட மேதையின் சிலை கிடப்பதை எந்த ஊழியரும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. சட்டமேதைக்கு அரசு ஊழியர்கள் அளிக்கும் அவமரியாதையை யார் தட்டிக் கேட்பது” எனக் கொந்தளித்துள்ளார்.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!