Tamilnadu
தமிழகத்தில் உச்சத்தில் வெங்காய விலை : மூன்று மாநிலங்களில் பெய்த கனமழையால் வரத்துக் குறைவு!
ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை ரூ.70-ஐ தண்டியுள்ளது. இந்தியாவில் பருவமழை காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து கடந்த வாரங்களில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம், இன்று ரூ.50-க்கு மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் பெரிய வெங்காயம் ரூ.70-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதிக மழை காரணமாக சின்ன வெங்காயத்தின் விளைச்சலும் குறைந்ததால் அதன் விலையும் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.75-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு சில்லறை விற்பனையில் விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த வெங்காய விலை உயர்வு தமிழக மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
-
“ஆளத் தெரியாமல், இந்தியாவை அடகு வைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்போம்!” : கி.வீரமணி அறிக்கை!
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!