Tamilnadu
தமிழகத்தில் உச்சத்தில் வெங்காய விலை : மூன்று மாநிலங்களில் பெய்த கனமழையால் வரத்துக் குறைவு!
ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை ரூ.70-ஐ தண்டியுள்ளது. இந்தியாவில் பருவமழை காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து கடந்த வாரங்களில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம், இன்று ரூ.50-க்கு மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் பெரிய வெங்காயம் ரூ.70-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதிக மழை காரணமாக சின்ன வெங்காயத்தின் விளைச்சலும் குறைந்ததால் அதன் விலையும் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.75-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு சில்லறை விற்பனையில் விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த வெங்காய விலை உயர்வு தமிழக மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!