Tamilnadu
“பயோமெட்ரிக் சீர் செய்யும் வரை பழைய நடைமுறையில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்”: தி.மு.க MLA கோரிக்கை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்து ரேஷன் பொருட்களை வழங்கும் முறையில், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் அலைகழிக்கப்படுவதாகவும் இதனால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கிராமப்புற மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயசூரியன், “கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை பெறுவதற்கு அங்குள்ள பயோ மெட்ரிக் எந்திரங்களில் அதிவேக இனைய சேவை வசதி கிடைக்காததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
பெரும்பாலவைர்கள் இரண்டு, மூன்று நாட்கள் அலைகழிக்கப்படுவதாகவும் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுபதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் இந்த புதிய நடைமுறையில் உள்ள குறைபாடுகளை சீர் செய்யும் வரையில் பழைய நடைமுறையிலேயே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!