Tamilnadu
நீலகிரியில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ரிசார்ட்களை இடிக்க உத்தரவு : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழிதடத்தின் குறுக்கே கட்டப்பட்ட ரிசாட் உள்ளிட்ட கட்டிடங்களை சீல் வைக்க உச்சநீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால், அவை மீண்டும் இயங்குவதாக உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ரிசார்ட்டுகள் மற்றும் கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 34 ரிசார்ட் உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். பல கட்டிடங்கள் வனப்பகுதியில் இல்லை என்பதால் சீல் வைக்கு கோரிய உத்தரவை நீக்கவேண்டும் என கோரினார்கள்.
இதனையடுத்து இதுகுறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. மேலும், அதற்காக நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
அந்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், யானைகள் வழித்தடத்தில்தான் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தது. இதனையடுத்து அறிக்கையில் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், கட்டிடங்களை இடிக்க தடைவிதிக்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Also Read
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!