Tamilnadu
நீட் தேர்வால் ஒரே நாளில் 3 உயிர்பலி: தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் தூக்கிட்டு தற்கொலை!
தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா நீட் குறித்த அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அருகே இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் - ஜெயசித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதான ஆதித்யா எனும் மாணவர், நீட் தேர்வுக்காக தயார்படுத்திக் கொண்டிருந்தார்.
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், மிகுந்த மன அழுத்தத்தாலும், நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், மேலும் ஒரு மாணவனின் தற்கொலைச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் மூன்று பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவர் மகன் மோதிலால் (21) என்பவர் நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று அதிகாலை மதுரை தல்லாகுளம் பகுதியில் வசித்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட துயரின் சுவடு மறைவதற்குள் மேலும் இரு மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு மோதிலால், தருமபுரி ஆதித்யா, மதுரை ஜோதிஸ்ரீ துர்கா, அரியலூர் விக்னேஷ் என இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் நான்கு பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாணவர்களின் உயிர்குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய பொதுமக்களும், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையிலும், அ.தி.மு.க அரசின் மெத்தனத்தால் தமிழகத்தில் உயிர் பலி தொடர்வது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!