Tamilnadu
“கோவையில் கொரோனா அதிகரிப்பதற்கு மோசமான உள்ளாட்சித்துறையே காரணம்” - தி.மு.க MLA பகிரங்க குற்றச்சாட்டு!
தமிழகத்தில் அண்மைக் காலங்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
இரு வாரங்களுக்கு முன்பு வரை விருதுநகர், தூத்துக்குடி, தேனி போன்ற மாவட்டங்களில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்புகள் தற்போது சேலம், கோவை, கடலூர் போன்ற மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது.
அதில் சென்னை அடுத்தபடியாக கோவை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறது. மே ஜூன் மாதங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக நீங்கிருந்த கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதற்கு உள்ளாட்சித்துறை நிர்வாகம் மெத்தனபோக்குடன் செயல்படுவதே காரணம் என கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான கார்த்திக் எம்.எல்.ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் காலதாமப்படுத்துவது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய அவர், கொரோனா ஊரடங்கால் 50 ஆயிரம் சிறு குறு தொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் தரமற்ற பணிகள் நடைபெறுகின்றது. இதன் மூலம் பல கோடி ஊழல் நடைபெறுகின்றது. 2016 க்கு பிறகு ஒப்பந்த பணிகள் தொடர்பாக மாநகராட்சி இணையத்தில் பதிவிறக்கம் செய்யாதது ஏன்? இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சூயஷ் ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!