Tamilnadu
“கோவையில் கொரோனா அதிகரிப்பதற்கு மோசமான உள்ளாட்சித்துறையே காரணம்” - தி.மு.க MLA பகிரங்க குற்றச்சாட்டு!
தமிழகத்தில் அண்மைக் காலங்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
இரு வாரங்களுக்கு முன்பு வரை விருதுநகர், தூத்துக்குடி, தேனி போன்ற மாவட்டங்களில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்புகள் தற்போது சேலம், கோவை, கடலூர் போன்ற மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது.
அதில் சென்னை அடுத்தபடியாக கோவை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறது. மே ஜூன் மாதங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக நீங்கிருந்த கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதற்கு உள்ளாட்சித்துறை நிர்வாகம் மெத்தனபோக்குடன் செயல்படுவதே காரணம் என கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான கார்த்திக் எம்.எல்.ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் காலதாமப்படுத்துவது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய அவர், கொரோனா ஊரடங்கால் 50 ஆயிரம் சிறு குறு தொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் தரமற்ற பணிகள் நடைபெறுகின்றது. இதன் மூலம் பல கோடி ஊழல் நடைபெறுகின்றது. 2016 க்கு பிறகு ஒப்பந்த பணிகள் தொடர்பாக மாநகராட்சி இணையத்தில் பதிவிறக்கம் செய்யாதது ஏன்? இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சூயஷ் ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!