Tamilnadu
புல்லட்- டியூக் வாகனங்களை மலிவு விலைக்கு விற்ற இளைஞர்கள் : தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது!
சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த மணிகண்டன்(24) மற்றும் கோவிந்தன்(22) ஆகிய இருவரை நீலாங்கரை போலிஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பிரபல இருசக்கர வாகன திருடன் ஸ்டீபன் என்பவனிடம் இருந்து இருசக்கர வாகனங்களை வாங்கி பல பேரிடம் சீசீங் வண்டி, ஆர்.சி புத்தகம் கிடையாது; போலிஸார் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என கூறி குறைந்த விலையில் வாகனத்தை விற்பனை செய்துள்ளனர்.
இதில், புல்லட் வாகனத்தை 25000க்கும் டியூக்-30, 000 ரூபாய்க்கும், டியோவை 10,000 ரூபாய் என ஆப்பர்களை அள்ளிவிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றி 5 இருசக்கர வாகனங்களை விற்று வந்துள்ளனர். வாகனத்தை விற்றப் பணத்தை கஞ்சா, மது போதைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
சமீபத்தில், தான் நீலாங்கரை போலிஸார் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரோனா காலகட்டம் என்பதால் வாகன பறிமுதல் செய்ய முடியாமல் போனது. இதனையடுத்து ஸ்டீபனின் உறவினரை பிடித்து இருசக்கர வாகன திருட்டு குறித்து விவரம் கேட்டு நீலாங்கரை போலிஸார் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
நீலாங்கரை வேளச்சேரி , தாம்பரம், சேலையூர் ஆகிய இடங்களில் திருடிய இருசக்கர வாகனங்களின் பதிவெண்ணை மாற்றி போலியான பதிவெண்ணை போட்டு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
போலிஸார் வாகன உரிமையாளர்களின் விவரங்களை கண்டறிய வட்டார போக்குவரத்து அலுவலக உதவியை நாடியுள்ளனர். கைது செய்த இருவரையும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
இளம்பெண் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர் : திருச்சி IG இல்லம் அருகே நடந்த அதிர்ச்சி!
-
“மாயாஜாலம் வளர்ச்சியைத் தராது” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
“இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !