Tamilnadu
6,000-ஐ கடந்த கொரோனா: மீண்டும் சென்னைக்கு திரும்பும் பிற மாவட்ட மக்கள்.. டோல்கேட்டில் அலைமோதும் கூட்டம்!
இ-பாஸ் நடைமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தமிழக மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், மக்களின் அழுத்ததினாலும், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலையும் அடுத்து செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் முறையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் அனைத்து நிறுவனங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரிவோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சுங்கச்சாவடி ஊழியர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். அந்தவகையில், செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடிகளிலும் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் வாகன போக்குவரத்தால் ஸ்தம்பித்தது.
கொரோனா அச்சம் காரணமாக சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் பலரும் மீண்டும் சென்னைக்கே திரும்புவதால், மாநகரம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. ஆகவே வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களையும் கண்காணித்து அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!