Tamilnadu
கொரோனாவால் இறந்த பாதிரியாரின் சடலத்தை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - ஆரணி அருகே பரபரப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி ஊராட்சிக்குபட்ட காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் பாதிரியார் ஜான் ரவி (52). இவர் அதே பகுதியில் தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜான் ரவிக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில் ஜான் ரவிக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா தனிவார்டில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலையில் ஜான் ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிரியார் ஜான் ரவியின் சடலத்தை ஆரணி அடுத்த குன்னத்துர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது குன்னத்துர் கிராம பொதுமக்கள் திடீரென ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து ஊரின் உள்ளே வரக் கூடாது என்று தடுப்பு வேலி அமைத்தனர்.
மேலும், இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருதரப்பினரையும் சமரசம் செய்து ஜான் ரவி உடலை கொரோனா நடைமுறையுடன் அடக்கம் செய்தனர்.
ஆரணி அருகே கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்தபோது கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!