Tamilnadu
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தினம்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !
முத்தமிழறிஞர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன், தி.மு.க பொருளாளர் துரை முருகன், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!