Tamilnadu
சாத்தான்குளம் கொலை: கேலி பேசிய குருமூர்த்தி; எடப்பாடி அரசின் அடிமை சாசனத்தால் வந்த வினை - உதயநிதி சாடல்!
உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகனின் லாக்கப் மரணம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தியின் துக்ளக் பத்திரிகையின் அட்டைப்படத்தில் கேலி சித்திரமாக வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அப்பாவி இருவரின் கொலையை நகைச்சுவையாக அட்டைப்படமாக்கும் முடிகிறது எனில், உங்களின் தமிழர் விரோத துரோகத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது. இதுதான் பத்திரிகை தர்மமா என துக்ளக் வார இதழுக்கு தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அப்பாவி இருவரை அடித்தேக் கொன்றுள்ளனர். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காடுகிறது. மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்.
இந்தச் சூழலிலும் இக்கொலையாக நகைச்சுவையாக அட்டைப்படமாக்க முடிகிறது என்றால் உங்களின் தமிழர் விரோத, துரோகத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது, இதுதான் பத்திரிகை தர்மமா என ஆடிட்டர் குருமூர்த்தியை வினவியுள்ளார்.
மேலும், நீயெல்லாம் ஆம்பளையா என்று கேட்டபோதே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்திருந்தால் இன்று ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பார்த்து ஆடிட்டர் குருமூர்த்தி கேலி பேசுவாரா?
உங்களின் கமிஷன், கலெக்ஷனுக்காக ஆடிட்டரே இந்த அரசு உங்கள் அடிமையென்று அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததால் வந்த வினை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!