Tamilnadu
கொல்லிமலையில் மிளகு மற்றும் காஃபி செடிகளை சூறையாடிய வெட்டுக்கிளிகள் - மலைவாழ் மக்கள் வேதனை!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மலைவாழ் மக்கள் மிளகு சாகுபடி செய்துள்ளனர். சில்வர் ஓக் மரங்களை தோட்டத்தில் நடவு செய்யப்பட்டு அதில் மிளகு செடிகளை ஏற்றிவிடடுள்ளனர். மேலும் தோட்டத்தில் ஊடுபயிராக காஃபி செடிகளும் பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக வளப்பூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில், ஆயிரக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து உள்ளன. அவை மிளகு மற்றும் காஃபி செடிகளில் உள்ள இலைகளை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் மொட்டையாக காட்சியளியளித்த செடிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வெட்டிக்கிளி வருகை குறித்து வேளாண்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொல்லிமலை மலை வாழ் மக்கள் விவசாயி கூறும்போது, “இந்த வெட்டுக்கிளி முதுகில் மூன்றுகருப்பு கோடுகள் உள்ளதாகவும் கொல்லிமலையில் இதுபோன்ற வெட்டுக்கிளிகள் இதற்கு முன்பு பார்த்தது இல்லை” என்றும் இவை அதிக அளவில் இலைகளை சாப்பிடுவதால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.
Also Read
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!