Tamilnadu
“மருத்துவ உபகரண முறைகேடுகளை எதிர்த்ததால் ஐ.ஏ.எஸ் அதிகாரி இடமாற்றம்!?” - எடப்பாடி அரசு அராஜகம்!
தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 3 துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பணியாற்றும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக உள்ள நாகராஜன் ஐ.ஏ.எஸ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் அஜய் யாதவ் தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நகர மற்றும் ஊரக திட்டமிடல் இயக்குனர் இருக்கும் சந்திரசேகர் சகாமுரி நிலச் சீர்திருத்தங்கள் துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க மறுத்த காரணத்தால் தமிழக சுகாதாரத்துறையின் திட்ட இயக்குநர் பணியிலிருந்து நாகராஜன் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.
Also Read
-
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?: பாஜக அமைச்சர் அட்ராசிட்டியால் விழிப்பிதுங்கிய பெண் காவலர்-பின்னணி?
-
ஓமன் நாட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு... சம்பளம் எவ்வளவு? என்ன பணி? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
“திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்த முதலமைச்சர்...” - முரசொலி பாராட்டு!
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!