Tamilnadu
“மருத்துவ உபகரண முறைகேடுகளை எதிர்த்ததால் ஐ.ஏ.எஸ் அதிகாரி இடமாற்றம்!?” - எடப்பாடி அரசு அராஜகம்!
தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 3 துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பணியாற்றும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக உள்ள நாகராஜன் ஐ.ஏ.எஸ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் அஜய் யாதவ் தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நகர மற்றும் ஊரக திட்டமிடல் இயக்குனர் இருக்கும் சந்திரசேகர் சகாமுரி நிலச் சீர்திருத்தங்கள் துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க மறுத்த காரணத்தால் தமிழக சுகாதாரத்துறையின் திட்ட இயக்குநர் பணியிலிருந்து நாகராஜன் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!