Tamilnadu
தினந்தினம் உச்சத்தைத் தொடும் கொரோனா பரவல் : தமிழகத்தில் 20,000-ஐ கடந்தது பாதிப்பு... 154 பேர் பலி!
தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆகவும், பலி எண்ணிக்கை 154 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
“தமிழகத்தில் இன்று மேலும் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 733 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 141 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் சென்னையில் 7 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவரும் என 9 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 71 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 11,334 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 618 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 11,313 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,776 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!