Tamilnadu
தினந்தினம் உச்சத்தைத் தொடும் கொரோனா பரவல் : தமிழகத்தில் 20,000-ஐ கடந்தது பாதிப்பு... 154 பேர் பலி!
தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆகவும், பலி எண்ணிக்கை 154 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
“தமிழகத்தில் இன்று மேலும் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 733 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 141 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் சென்னையில் 7 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவரும் என 9 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 71 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 11,334 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 618 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 11,313 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,776 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!