Tamilnadu
2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை - அ.தி.மு.க பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்து விடலாம் எனும் எண்ணத்தில் இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அ.தி.மு.க பொருளாளர் கணேசன் (61). இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அ.தி.மு.க பிரமுகர் கணேசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!