Tamilnadu
2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை - அ.தி.மு.க பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்து விடலாம் எனும் எண்ணத்தில் இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அ.தி.மு.க பொருளாளர் கணேசன் (61). இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அ.தி.மு.க பிரமுகர் கணேசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!