Tamilnadu
2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை - அ.தி.மு.க பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்து விடலாம் எனும் எண்ணத்தில் இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அ.தி.மு.க பொருளாளர் கணேசன் (61). இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அ.தி.மு.க பிரமுகர் கணேசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
“இந்த மாதிரி கோமாளி கூட்டத்தோடலாம் நாம சண்டைபோட வேண்டியிருக்கு...” - துணை முதலமைச்சர் கலகல பேச்சு!
-
“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் : மாணவர்களுக்கு AI பயிற்சி!
-
சட்டமன்றத் தேர்தல் : கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு -தி.மு.க அறிவிப்பு!
-
“இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான குரல் இது...” : முரசொலி தலையங்கம் !