Tamilnadu

அதிகரிக்கும் உயிர்பலி : இன்று மட்டும் 9 பேர் பலி... 646 பேருக்கு கொரோனா தொற்று! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17728-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“தமிழகத்தில் இன்று (மே 26) 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் 7 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,342 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,088 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 15,105 பேரும், 60 வயதைக் கடந்தவர்கள் 1,535 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: “ஊரடங்கை அவசர அவசரமாக தளர்த்தினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்” - WHO எச்சரிக்கை! #CoronaLockdown