Tamilnadu
7ம் தேதி முதல் 'டாஸ்மாக்' திறப்பு : 5 பேருக்கு மேல் கூடக்கூடாது - விதிமுறைகள் என்னென்ன? #Lockdown
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லையோர மாவட்ட மக்கள் அண்டை மாநிலங்களுக்கு கூட்டமாகச் செல்வதைத் தடுக்கும் விதமாக தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் பின்வருமாறு :
* தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.
* மதுக்கடைகளில் தனிநபர் இடைவெளி ஆறு அடி தூரமாக இருக்க வேண்டும்.
* டாஸ்மாக்கில் தேவைக்கு ஏற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை.
* பார்கள் திறக்கப்பட அனுமதி இல்லை.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!