Tamilnadu
பசி கொடுமை தாங்க முடியாமல் கணவன் - மனைவி தற்கொலை : கொரோனா ஊரடங்கால் தொடரும் கொடூரம்!
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை பகுதி, பெரிய வடக்குவெளி ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் வே.துரைசாமி, விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு சுதாகர் எனும் மகனும் இளமதி எனும் மகளும் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னர், மகனும் மகளும் தனிதனியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்டுத்தப்பட்டுள்ளதால் வேலையில்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மகன் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து தாய், தந்தையை பார்த்துவிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டுச் செல்வாரம்.
இந்நிலையில் மகனும் பணமில்லாமல் சிரமம் அடைவதைக் கண்டு இனியாருக்கும் பாராமாக இருக்கக்கூடாது என நினைத்து இருவரும் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டனர்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலை கிடைக்காமல், வறுமையில் வாடிய துரைசாமி- நாகம்மாள் தம்பதியர், வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் மக்களைக் கொல்கிறதோ இல்லையோ, வறுமை இவர்களைக் கொன்றுவிட்டது என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
Also Read
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“வெல்வோம் உடன்பிறப்புகளே... 2026 தேர்தல் களம் நம்மை அழைக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
”பொய் சொல்லி போராட்டம் நடத்தும் பழனிசாமி... இருப்பை காட்டிக்கொள்ள நாடகம்!”: முரசொலி விமர்சனம்!
-
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!