Tamilnadu
அம்மா உணவகத்தில் சாப்பிடுவதுபோல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ:மக்களை இப்படி ஏமாற்றுவது ஏன்?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள செதுகரை நகராட்சி பகுதியில் உள்ள அ.தி.மு.கவினருக்கு 5 கிலோ அரசு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை அ.தி.மு.கவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இடித்துக்கொண்டு வரிசையில் நின்றுவந்ததை பார்த்தும் அமைச்சர் கண்டுக்கொள்ளாமல் பொருட்கள் வழங்கியது அங்கிருந்த பத்திரிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி, விளம்பரத்திற்காக அ.தி.மு.க செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அம்பலமானது. அதாவது, குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்திற்குள் நுழைந்த அமைச்சர்கள் அ.தி.மு.க சார்பில் இலவச உணவுகளை வழங்கினார்கள்.
அப்போது அமைச்சர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் அம்மா உணவகத்தில் தயார் செய்திருந்த உணவை ருசி பார்ப்பதுபோல் புகைப்படம் எடுப்பதற்காக போஸ் கொடுத்தனர்.
அப்போது கே.வி.குப்பம் எம்.எல்.ஏ லோகநாதன் முகக்கவசம் அணிந்து கொண்டு, உணவு சாப்பிடுவதுபோல் போஸ் கொடுத்தார். பின்னர் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை அங்கேயே வைத்து விட்டு சென்றனர். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
Also Read
-
குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!
-
”பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்பு” : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி கண்டனம்!
-
+2 தேர்வு : எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை சதவீதம் தேர்ச்சி? - புள்ளி விவரங்களோடு பட்டியல் வெளியீடு !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !