Tamilnadu
தூய்மைப் பணியாளரை சாதிய வன்மத்தோடு இழிவுபடுத்திய நபர் மீது போலிஸ் வழக்குப்பதிவு : 3 மாதம் சிறை தண்டனையா?
சென்னை பள்ளிகரணை பகுதியில் உள்ள ஐஐடி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நேற்றைய தினம் தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் எடுக்கும் லாரி ஓட்டுநரான தூய்மைப் பணியாளர் மணிகண்டனை என்பவரை தகாத வார்த்தையால் கொச்சையாக பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சந்திரசேகர் பேசுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். சாதிய வன்மத்தோடு சந்திரசேகர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சந்திரசேகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். இதனிடையே மிகுந்த மனவேதனை அடைந்த மணிகண்டன் இதுதொடர்பான புகாரை பள்ளிகரணை காவல் நிலையத்தில் அளித்திருந்தார்.
அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், தகாத வார்த்தையால் கொச்சைபடுத்தும் வகையில் திட்டியது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 294B பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!