Tamilnadu
“கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை” - கேரளாவில் இருந்து நடந்தே வந்தவரா? - அதிர்ச்சி தகவல்!
அரியலூர் மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. கேரளாவில் பணியாற்றிய நாராயணசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி அரியலூர் தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஏப்ரல் 7ஆம் தேதி அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரியாத நிலையிலேயே, வார்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவமனையிலேயே ஒருவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பில் இருக்கவேண்டிய கொரோனா அறிகுறி கொண்ட நபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா எனக் கேள்வி எழுந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட நபர் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டதால் கடந்த 6ம் தேதி கேரளாவில் இருந்து தனது சொந்த ஊரான கடம்பூருக்கு நடந்தே வந்ததாகக் கூறப்படுகிறது.
கொரோனா வார்டில் இருந்த நாராயணசாமி மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”