Tamilnadu
மைதா மாவு என நினைத்து பூச்சி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்ட குடும்பம் : மருமகள் பரிதாப பலி!
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தினமும் ஏதாவது சமைத்துக்கொடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், அரோக்கோணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மைதா மாவு என நினைந்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்டு பரிதாமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்வரின் மருமகள் பாரதி.
இவர் நேற்றைய தினம் அவரது மாமனார் பெரியசாமியிடம் போண்டா செய்வதற்கு மாவு வாங்கிவரும் படி கூறியுள்ளார். அவர் மைதா மாவுடன் தோட்டத்திற்கு தெளிக்க பூச்சுக்கொல்லி மருந்தையும் வாங்கி சென்றுள்ளார். மருமகளிடம் எதுவும் சொல்லாமல் இரண்டையும் ஒரே இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதுதெரியாமல் இரண்டும் மாவுதான் என நினைத்து ஒன்றாக கலந்து வீட்டில் உள்ளவர்களுக்கு போண்டா செய்துக் கொடுத்துள்ளார் பாரதி. அதனை பாரதியின் கணவர் சுகுமார், மாமியார் லட்சுமி, மாமனார் பெரியசாமி என குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நால்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரக்கோணம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“NDA-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“திராவிட மாடல் 2.0-விற்கு மகுடம் சூட்ட போகும் பெண்கள்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
-
தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!
-
2016–2022ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாராருக்கு என்னென்ன விருதுகள்: முழு விவரம் இதோ!
-
அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!