Tamilnadu
வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் சொல்லும் எடப்பாடி : உண்மை எண்ணிக்கையை அரசு அறிவிக்குமா? #Lockdown
இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “வெளிமாநிலத் தொழிலாளர்கள் 1.34 லட்சம் பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.
உண்மை நிலவரம் எடப்பாடி பழனிசாமி கூறிய அந்த எண்ணிக்கை பொய் என்பதையே காட்டுகிறது. காரணம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் வட மாநிலத் தொழிலாளர்கள் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் பார்த்தால் தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்க வாய்ப்புள்ளது. சென்னையில் மட்டுமே லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அரசு 1.34 லட்சம் பேர் என்று சொல்வது அபத்தமாக உள்ளது. பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை மட்டுமே அரசு கணக்கு காட்டுகிறது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமலேயே தமிழகத்தில் நுழைந்துள்ளனர்.
அவர்களை இந்த அரசு திட்டமிட்டு மறைக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு அரசு எவ்விதமான உதவிகளைச் செய்து வருகிறது எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!