Tamilnadu
சென்னையில் வாகனங்களில் பயணித்த மக்களால் போக்குவரத்து நெரிசல்- கேள்விக்குறியாகும் ஊரடங்கு உத்தரவு! #Corona
கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் விதமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வரும் நபர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பாடி மேம்பாலத்தில் பெருமளவில் வாகனங்களில் மக்கள் பயணித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், போலிஸார் வாகன ஓட்டிகளின் அடையாள அட்டையினை சோதனை செய்து அவசர தேவைகளுக்காகச் செல்பவர்களை மட்டும் அனுப்பி வைத்தார்கள்.
மேம்பாலத்தின் மூன்று புறமும் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் வாகனங்களில் பயணித்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!