Tamilnadu
“பிரிட்டனே அர்த்த சாஸ்திரத்தை வைத்துத்தான் ஆட்சி செய்கிறது”- ‘சாணக்யா’ விழாவில் ‘மனு’ பெருமை பேசிய ரஜினி!
ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் ‘சாணக்யா’ செய்தி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் ஆகிய மூவருக்கும் ‘சாணக்யா விருதுகள்’ அறிவிக்கப்பட்டிருந்தது.
தோழர் நல்லகண்ணு, வலதுசாரி ஆதரவாளரும் பா.ஜ.க அபிமானியுமான ரங்கராஜ் பாண்டேவின் நிறுவனம் வழங்கும் சாணக்கியரின் பெயரிலான விருதை ஏற்க மறுத்தார்.
இந்நிலையில், அந்த விருது வழங்கும் ‘சாணக்யா’ நிறுவனத்தின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், விருது பெறுவோரையும், ரங்கராஜ் பாண்டேவையும் பலவாறாகப் புகழ்ந்து பேசினார்.
மேலும், அர்த்த சாஸ்திரம், கோஹினூர் வைரம் உள்ளிட்ட பெருமதிப்பு கொண்ட பொருட்களை பிரிட்டிசார் கொள்ளையடித்துச் சென்றதாகவும், அர்த்த சாஸ்திரத்தைக் கொண்டே இவ்வளவு ஆண்டுகாலமாக இங்கிலாந்தில் ஆட்சி நடத்துவதாகவும் பேசினார்.
“அர்த்த சாஸ்திரத்தைப் படித்துத்தான் இங்கிலாந்து ராணி ஆட்சி செய்கிறாரா?” என சமூக வலைதளங்களில் பலரும் ரஜினியின் பேச்சை கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!