Tamilnadu
பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - BJP, VHP அமைப்பினர் கைது : சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!
கோவை மாவட்டம் கணபதி வேதம்பாள் நகரில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசல் மீது கடந்த 4-ம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சரவணம்பட்டு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்து முன்னனி அமைப்பினர் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றதை வைத்து இரண்டிற்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் போலிஸார் விசாரித்தனர்.
அந்த விசாரணையின் அடிப்படையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அகில் மற்றும் பா.ஜ.க உறுப்பினரான பாண்டி ஆகிய இருவரையும் சந்தேகத்தின் போரில் போலிஸார் கைது செய்தனர். பள்ளிவாசல் மீது இவர்கள் இருவரும் பெட்ரோல் குண்டு வீசியது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!