Tamilnadu
சத்தமில்லாமல் தாக்கி வரும் ‘பன்றிக்காய்ச்சல்’ : ஒரே மாதத்தில் 132 பேர் பாதிப்பு : தமிழகம் முதலிடம்!
பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 132 பேர் பாதிப்பிற்குள்ளானதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
H1N1 மற்றும் H2N3 போன்ற பல்வேறு வகையான வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் 132 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இருமல், சளியுடன் வரும் நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பைப் பொறுத்தவரை நடப்பாண்டில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது அடுத்தபடியாக தெலங்கானாவில் 78 பேரும், கர்நாடகாவில் 74 பேரும் டெல்லியில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 437 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!