Tamilnadu
சத்தமில்லாமல் தாக்கி வரும் ‘பன்றிக்காய்ச்சல்’ : ஒரே மாதத்தில் 132 பேர் பாதிப்பு : தமிழகம் முதலிடம்!
பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 132 பேர் பாதிப்பிற்குள்ளானதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
H1N1 மற்றும் H2N3 போன்ற பல்வேறு வகையான வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் 132 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இருமல், சளியுடன் வரும் நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பைப் பொறுத்தவரை நடப்பாண்டில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது அடுத்தபடியாக தெலங்கானாவில் 78 பேரும், கர்நாடகாவில் 74 பேரும் டெல்லியில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 437 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!