Tamilnadu
அமைச்சர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பழங்குடியின சிறுவன் புகார் : FIR கூட பதியாத போலிஸ்!
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கிருந்த கோவிலுக்குச் சென்ற அமைச்சர் கோவிலுக்கு அருகில் நின்ற பழங்குடியின சிறுவனை அழைத்தார். தயக்கத்தோடு நின்ற சிறுவனை ‘டேய் இங்க வாடா’ என ஒருமையில் அழைத்ததோடு அல்லாமல், இந்த செருப்பைக் கழற்றிவிடு எனக் கூறி தனது காலை நீட்டியுள்ளார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். மேலும் இந்தச் சம்பவத்தின் போது புகைப்படம் எடுக்காதவாறு மறைத்து நின்ற அ.தி.மு.க-வினர் பத்திரிகையாளரை புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் அமைச்சருக்கு பழங்குடியின மாணவர் செருப்பை கழற்றிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலையத்தில், தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்ற வைத்து தன்னை அவமானப்படுத்தியதற்காக அவர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பழங்குடியின சிறுவன் புகார் அளித்துள்ளார்.
மேலும், அந்தப் புகாரில் அமைச்சர் சொல்லும்போது போலிஸார் மற்றும் உயரதிகாரிகள் சுற்றி இருந்ததால் அச்சத்தில் அமைச்சரின் செருப்பைக் கழற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுவரை அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உயரதிகாரிகளின் தலையீடு இருப்பதாக போலிஸார் தயக்கம் காட்டி வருகின்றனர். அமைச்சர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!