Tamilnadu
பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : பா.ம.க நிர்வாகி போக்சோவில் கைது!
பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை 102வது வட்ட செயலாளர் சத்யா. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள பள்ளி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் நட்பாகப் பழக்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே பள்ளிக்குச் சென்ற மாணவி இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை என மாணவியின் பெற்றோர் 28-ம் தேதி காலையில் டிபி சத்திரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் என புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அன்று மாலையே கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காணாமல் போன பள்ளி மாணவி, சத்தியா என்ற நபர், ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தாக புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், டிபி சத்திரம் 102வது பகுதி பா.ம.க வட்ட செயலாளர் சத்தியாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பா.ம.க நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!