Tamilnadu
பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : பா.ம.க நிர்வாகி போக்சோவில் கைது!
பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை 102வது வட்ட செயலாளர் சத்யா. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள பள்ளி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் நட்பாகப் பழக்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே பள்ளிக்குச் சென்ற மாணவி இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை என மாணவியின் பெற்றோர் 28-ம் தேதி காலையில் டிபி சத்திரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் என புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அன்று மாலையே கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காணாமல் போன பள்ளி மாணவி, சத்தியா என்ற நபர், ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தாக புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், டிபி சத்திரம் 102வது பகுதி பா.ம.க வட்ட செயலாளர் சத்தியாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பா.ம.க நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.
Also Read
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!