Tamilnadu
“இந்து மகாசபை தலைவர் பாலியல் தொல்லை கொடுக்கிறார்” - பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!
நாடு முழுவதும் பாலியல் ரீதியிலான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. கலாசாரக் காவலர்களாக முகம் காட்டும் இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள் பலரும் பாலியல் குற்ற விவகாரங்களில் சிக்கி வருகின்றனர். பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் முதற்கொண்டு பல்வேறு இந்து மகாசபை உறுப்பினர்கள், நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் ஸ்ரீகண்டன் மீது நிரஞ்சனி என்ற பெண் நிர்வாகி கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அதில், திருவள்ளூரைச் சேர்ந்த நிரஞ்சனி (40) என்ற பெண் கடந்த 2016ம் ஆண்டு அனைத்திந்திய இந்து மகா சபாவின் மகளிர் பிரிவில் மாநில செயலாளராக இணைந்துள்ளார். அதன் பிறகு ஸ்ரீகண்டனுக்கு மொழி பிரச்னை இருப்பதால் அவருடன் அவ்வப்போது டெல்லிக்கு சென்று வந்துள்ளார்.
அந்த சமயத்தில் தனக்கு ஸ்ரீகண்டன் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தி வந்ததால் இந்து மகாசபாவில் இருந்து தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், தன் குடும்பத்தினரை மிரட்டியும், தன்னைப் பற்றி அவர்களிடம் கீழ்த்தரமாகப் பேசியும் வந்துள்ளார் ஸ்ரீகண்டன் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஸ்ரீகண்டன் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!
-
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் ஆ.மணி MP வலியுறுத்தல்!
-
பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்திற்கு மாற்றுவது எப்போது : திமுக MP ஈஸ்வரசாமி கேள்வி!
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!