Tamilnadu
“தமிழக சட்டப்பேரவையில் CAA-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவேண்டும்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். இந்தத் தீர்மானத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆதரவு தெரிவித்தது. அதனையடுத்து இந்தத் தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கேரள சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், தமிழக சட்டமன்றத்திலும் CAA-வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, சமூகவலைதளத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “கேரள சட்டமன்றப் பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது.
அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது.
ஆகவே வருகின்ற ஜனவரி 6ம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!