Tamilnadu
குடும்பத் தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவி!
சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் உபயதுல்லா (39). இவருக்கு மனைவி நஸ்ரின் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2 ம் தேதி அன்று கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நஸ்ரின் அடுப்பில் இருந்த சூடான எண்ணெய்யை கணவர் மீது ஊற்றியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் அலறிய உபயதுல்லாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் நஸ்ரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் அவரது மனைவி நஸ்ரினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”பின்வாங்கிய தவெக அரசு.. அரசுப்பணியில் ராதன் பண்டிட்.. சட்டமன்றம் வரை எதிரொலித்த கடும் எதிர்ப்பு!”
-
“இந்த Change-க்கு பின்னால் பெரிய Exchange இருக்கிறதோ?” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
“Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்த தவெகவின் Dirty Politics” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
”நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 சாபங்கள்.. பொருளாதார அவசர நிலையா?” - முரசொலி தலையங்கம் கேள்வி!
-
அதிகாலையில் நடந்த கொடூரம் : லாரி மீது கார் மோதி காவலர் உட்பட 6 பேர் பலி!