Tamilnadu
சென்னை மெரினா கடற்கரையில் மலைமலையாக ஒதுங்கும் நுரை... காரணம் என்ன?
சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகளுடன் நுரை உருவாகி ஒதுங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பகுதியில் இருக்கும் ஆலைகளில் இருந்து கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகளால் சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மூன்று நாட்களாக நச்சுக்கழிவு நுரை கரை ஒதுங்கி வருகிறது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் இயங்கிவரும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், ரசாயன கழிவுநீரை உரிய முறையில் பூமிக்கு அடியில் சேமித்து சுத்திகரிக்காமல் கால்வாய் வழியாக வெளியேற்றி வருகின்றன. இப்படி வெளியேற்றப்படும் நீர் மழைக்காலங்களில் கடலில் கலந்து விடுகிறது.
இதனால், மூன்று நாட்களாக பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரைப் பகுதிகளில் நச்சுக்கழிவு நுரைக் குவியலாக கரை ஒதுங்கி வருகிறது. இது அப்பகுதிக்கு வருவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டிலும் இதேபோன்று கடல் அலைகள் நுரையுடன் எழுந்தன. கடந்தாண்டு இதுபோன்று எழுந்தபோது, மாசுக்களால் பருவ மழைக்கு முன்பு இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!